பாலிவுட் நடிகர் அமீர்கான், கஜா புயல் பாதிப்பால் தவித்து வரும் தமிழக மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், கஜா புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. இந்த புயல் தாக்குதலில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தமிழக அரசும் தன்னார்வலர்களும் புயல் பாதித்த மாவட்டங்களில் மறுசீரமைப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி நிவாரணம் கேட்டுள்ளது. மேலும், ரூ.5000 கோடியை உடனடி நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், மத்திய அரசு இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்காமல் மௌனம் சாதித்து வருகிறது.
இதுஒருபுறம் இருக்க, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியையும் பொருள் உதவியையும் புயல் பாதித்தப் பகுதிகளுக்குச் செய்து வருகின்றனர். இருப்பினும், மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருப்பதால் மறுசீரமைப்புப் பணிகள் மிகுந்த கடினமானதாக இருந்து வருகிறது.
Home /
Red Rose Fm News
,
sports
,
tamil Cinema News
/
கஜா புயலால் தவிக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ ஒன்றுபடுவோம்- நடிகர் அமீர்கான்