நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கவுள்ள ‘மின்னல்வீரன்’ படத்தின் நாயகியாக பிரபல மலையாள நடிகை பார்வதி நாயர் ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் அதர்வா, ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘மின்னல் வீரன்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை பார்வதி நாயர் நடிக்கவுள்ளார். மலையாள நடிகையான பார்வதி நாயர் அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘நிமிர்’ படத்தை தொடர்ந்து வேறு எந்தப் படமும் தமிழில் இன்னும் வெளியாகவில்லை. மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சீதக்காதி’ படத்திலும் பார்வதி நாயர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரம்யா நம்பீசனும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.
‘சீதக்காதி’ படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் பார்வதி நாயருக்கு தற்போது ‘மின்னல் வீரன்’ படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை ஆதியும், நிக்கி கல்ராணியும் இணைந்து நடித்த ‘மரகதநாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.